கோடியில் ஆடம்பர திருமணம் ஏன்? வெளிப்படையாக சொன்ன நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். தனுஷ் உடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தவர் இப்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள். சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணம் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. பெரிய நடிகரின் திருமணம் கூட இந்த அளவிற்கு வைரல் ஆகி இருக்குமா? என்றால் அது சந்தேகமே. ஏனெனில் நயன்தாரா திருமணம் பற்றி கூட சில நாட்கள் தான் பேசினார்கள். 

ஆனால் ரோபோ ஷங்கரின் மகள் திருமணம் பற்றியோ ஒரு மாதம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.எனது திருமணம்எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி | Thedipaar News

Related Posts