உயிரிழந்த தாயின் சடலத்துடன் 6 நாட்களாக தங்கியிருந்த மகன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா பைரோஸ். கடந்த பல ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு முகமது குலாம் காதர் (22) என்ற மகன் உள்ளார். பொதுவாக காதர், வெளிநபர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ளவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது வீட்டில் இருந்து கட்டிட பணியாளர்கள் சிலர் வெளியேறுவதை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காதரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 2ம் தேதி தனது தாய் ஆஷா இறந்து விட்டதாகவும், 6 நாட்களாக தாயின் உடலுடன் இருந்ததாகவும் கூறினார். ஆஷாவின் உடலை தானே புதைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts