சுட்டெரிக்கும் வெயில்... விநாயகர் சிலைக்கு ஷவர் குளியல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரியலூரில் கோடை வெயிலில் இருந்து விடுபட வேண்டி விநாயகர் ஆலயத்தில் சாமி சிலைக்கு தண்ணீர் தொட்டியும், ஷவர் குளியலுமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

அரியலூரில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் சிலையைச் சுற்றிலும் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் வெட்டிவேர், பன்னீர், திரவிய பொடிகளைக் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 

மேலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசித்து வெயில் கொடுமை குறைய வேண்டும் என வேண்டுதல்களை வைத்து வழிபடுகின்றனர்.

Related Posts