சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அஜ்மான் தொழிற்பேட்டை பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆசிய நாட்டைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட்டில் வாலிபர், தனது காதலியிடம் ஏன் பேசாமல் விலகி செல்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது காதலியை சரமாரியாக குத்தினார். இதில் இளம்பெண் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆத்திரம் தீராத வாலிபர் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கும் தீ வைத்தார். இது குறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் அஜ்மான் போலீசார் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் காயம் அடைந்த 3 ஊழியர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts