நெக்ஸஸ் அட்டை பெற முயன்ற மிஸ்ஸிசாகா நபருக்கு ஏமாற்றம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மிஸ்ஸிசாகாவைச் சேர்ந்த நபர்  தனக்கும் தனது மனைவிக்கும் நெக்ஸஸ் அட்டை பெற்றுக் கொள்வதற்காக 1500 டொலர்களை இணைய தளமொன்றுக்கு செலுத்திய போதிலும் அட்டை கிடைக்கவில்லை.

முகநூலில் செய்யப்பட்ட விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் இவ்வாறு பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

சில இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நெக்ஸஸ் அட்டை தொடர்பில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்பொழுது நெக்ஸஸ் அட்டை பெறுவதற்காக 50அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதுடன், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் இந்த தொகை 120 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கவனயீர்ப்பு | Thedipaar News

Related Posts