இலங்கையில் இருந்து இந்தியா வந்த ISIS தீவிரவாதிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகளை மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அகமதாபாத்திற்கு வந்த பயங்கரவாதிகளின் நோக்கத்தை கண்டறிய, தற்போது ரகசிய இடத்தில் அவர்களை வைத்து ஏடிஎஸ் விசாரித்து வருகிறது. 4 பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகள் நால்வரும் தங்களது திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத் ஏடிஎஸ் அவர்களை கைது செய்தது. இந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள தங்களது கையாளுபவர்களின் உத்தரவுக்காக காத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மறைவிடங்களில் இருந்து தங்களைச் சேர வேண்டிய ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருட்களுக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் புலப்பட்டது. பயங்கரவாதிகள் வசமிருந்த ஸ்மார்ட்போன்களில் இருந்த சமூக ஊடக சங்கேத உரையாடல்களை ஏடிஎஸ் மீட்டு வருகிறது.

நால்வரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக குஜராத்தை அடைந்திருப்பதால், சென்னையில் எங்கேனும் தங்கினார்களா, எவரையேனும் சந்தித்தார்களா என மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts