Oshawa நகரை சேர்ந்த தமிழர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தனக்கு கீழ் வேலை பார்த்த ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக Oshawa உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமைகள், இரண்டு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டுஊழியர்கள் தங்கள் மேலாளர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து மார்ச் 2024ல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவர் Toronto, New Hamburg, Kitchener பகுதியில் உள்ள உணவகங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர் மேலும் பலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் - மோடி | Thedipaar News

Related Posts