சீரியல் நடிகை ஆலியா மானசாவின் வேதனையான மறுபக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீரியல் நடிகை ஆலியா மானசாவின் வேதனையான மறுபக்கம்! 

 விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஆலியா மானசாவுக்கு அந்த தொடரே வாழ்க்கையை தொடங்கவும் உதவியாக இருந்துள்ளது. ஆமாங்க நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா தொடரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் இருந்தவர் இப்போது சன்டிவியில் நடிக்கிறார் அதுமட்டுமா? சோசியல் மீடியா மூலமாக கூட பணம் ஈட்டுகிறார். இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுவேன், மேக்கப் போட்டு முடி சரிசெய்து ஆடிஷனுக்கு செல்வேன். சிலநேரம் அவர்கள் கூறும் விஷயம் எனக்கு செட் ஆகாது, பல நேரம் அவர்களே என்னை அனுப்பிவிடுவார்கள்.

அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, சினிமா பாடலுக்கு பின்னணி டான்ஸராக போவது என நிறைய வேலைகள் செய்துள்ளேன். சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருந்த எனக்கு ஒரு சமயம் சின்னத்திரை வாய்ப்பு வந்தது, அப்போது எனது அப்பாவும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே எனது அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக்கொண்டேன்.அப்படியே சீரியல் வாழ்க்கையில் செட் ஆகிவிட்டேன் என கூறியுள்ளார். இவரது சோசியல் மீடியா வீடியோக்களை பார்த்தால் மிகவும் விளையாட்டாக பேசுவார். ஆனால் விளையாட்டான பேச்சிற்கு பின்னால் இவ்வளவு வேதனை இருப்பது இப்போது தான் தெரிகிறது.


Related Posts