ஓடும் பேருந்தில் அசிங்கமாக தொட்ட நபர்! பளீரென ஒன்னுவிட்ட நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நடித்து வருபவர் அஞ்சலி பாஸ்கர். அந்த தொடரில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சோசியல் மீடியாவில் கூட இந்த நடிகைக்கு வரவேற்பு அதிகம். இப்போது சினிமா நடிகை, சீரியல் நடிகை என எல்லோருமே சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மென்ட் பற்றி ஓபனாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகை அஞ்சலி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்தது இல்லை என கூறி இருக்கிறார். மேலும் படங்களில் வருவது போல ஒரு சம்பவம் தனது வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது என கூறி இருக்கிறார். பெண்கள் பேருந்தில் செல்லும்போது சீண்டலில் ஈடுபடும் பலர் இருக்கிறார்கள். 

கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த நான், பேருந்தில் தான் செல்வேன். அப்போது ஒரு நடுத்தர வயது நபர் என்னை தகாத முறையில் உரசிக்கொண்டிருந்தார். அந்த நபருக்கு ஒரு குத்து விட்டேன். அந்த நபர் இறங்கி சென்று விட்டார். ஆனால் எனக்கு ஆதரவாக அந்த பேருந்தில் இருந்த பெண்கள் கூட வரவில்லை என நடிகை அஞ்சலி பாஸ்கர் கூறி இருக்கிறார். நடிகையின் இந்த வீர செயலுக்கு ஒருபக்கம் பாராட்டும் மறுபக்கம் இவருக்காக பேருந்தில் யாரும் ஆதரவாக பேசாமல் இருந்ததற்கு வருத்தமும் தெரிவித்து வருகிறார்கள் இவரது சோசியல் மீடியா ரசிகர்கள்.

Related Posts