மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ள சிவகார்த்திகேயன் மனைவி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வைக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். இசை அமைப்பாளர் இமான் மனைவி உடன் இவருக்கு ஏதோ இருப்பது போல செய்திகள் வந்தாலும் கூட அது குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவந்தார். ஒரு நாள் இமான் பேட்டியில் இந்த விவகாரம் குறித்து ஓபனாக பேசிவிட்டார். என்னதான் இவர் மீது பல அவதூறு விழுந்தாலும் கூட எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு சென்று கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீப காலமாக இவரது படங்கள் எல்லாமே சொல்லிக்கொள்ளும்படி ஓடுவதில்லை. 

இவர் நடிக்க உள்ள அடுத்த படங்கள் ஆவது எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், சிவகார்த்திகேயன் தனது மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவருடைய ரிசப்ஷன் வீடியோ கூட விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.திருமணத்திற்கு பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா எனும் மகள் பிறந்தார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்.

Related Posts