நார்வே செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்த பிரக்ஞானந்தா உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நார்வேவில் சர்வதேச செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்சல்னை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் இதேபோன்று மகளிருக்கான செஸ் போட்டியில் கிளாசிக் பிரிவில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலியும் மோதினர்.

இந்த போட்டியில் வைசாலி வெற்றி பெற்று 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் நார்வே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பி இருவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு இருவரின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்றும் கூறியுள்ளார்.


Related Posts