உலக தமிழர் பேரவையில் இருந்து விலகிய கனடிய தமிழர் பேரவை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Global Tamil Forum -GTF எனப்படும் உலக தமிழர் பேரவையில் இருந்து விலகும் முடிவை கனடியத் தமிழர் பேரவை (CTC) எடுத்துள்ளது. கனடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கு இந்த தகவல் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டான்ரன் துரைராஜா இந்த தகவலை தமது உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளார். நீண்ட பரிசீலனையின் பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

எங்கள் பணியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தியும் கண்டனங்களும் கனடிய தமிழர்கள் மத்தியில் தொடர்கிற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்னது.

Related Posts