சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர். இப்போது தயாரிப்பு நிறுவனம் வைக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். இவரது தந்தை போலீஸ் அதிகாரி, அக்காவோ மருத்துவர், சிவகார்த்திகேயனும் எம்பிஏ படித்துள்ளார். இப்படி குடும்பமே படிப்பு பின்னணியை கொண்டுள்ளது. இருப்பினும் இவர் மீடியா துறையை தேர்ந்தெடுத்து அதிலும் நடிகராக சாதித்துவிட்டார். இவர் பிறப்பிலே வளமான குடும்பத்தில் செல்வ செழிப்போடு பிறந்தாலும் கூட தான் தனியாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல கஷ்டங்களை அனுபவித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். இருப்பினும் இவர் மீது பல சர்ச்சைகள் உள்ளது. இசை அமைப்பாளர் இமான் மனைவிக்கும் இவருக்கும் ஏதோ ஒன்று இருப்பது போல பேசப்பட்டது. ஆனால் இவரோ அமைதி காத்து வருகிறார். 

 இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆர்த்தி மீண்டும் கர்பமாக இருக்கிறார் என சமீபத்தில் வீடியோ உடன் தகவல் பரவியது.இந்நிலையில் ஆர்த்திக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதை பற்றி சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம் என சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருக்கிறார்.

Related Posts