வாழ்நாள் முழுக்க செருப்பு இல்லாமல் வாழ விரும்பும் விஜய் ஆண்டனி! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமையை கொண்டுள்ள பன்முக கலைஞர் தான் விஜய் ஆண்டனி. இவர் இசை அமைத்தாலும் அது மக்களுக்கு பிடித்து விடுகிறது, பின்னணியில் பாடினாலும் பிடித்து விடுகிறது, நடிகராக நடித்தாலும் மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். குறிப்பாக நான் படம் மூலம் நடிகரான இவர் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மூலம் சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி அவரது மகளின் இறப்பிற்கு பிறகு ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது எங்கே வந்தாலும் காலில் செருப்பு இல்லாமல் தான் வருகிறார்.

இதுகுறித்து அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதி தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது, நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.நான் எப்போது செருப்பு இல்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்த விதமான நெருக்கடியான சூழலும் எனக்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன், இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என பேசியுள்ளார். மருத்துவரீதியாக செருப்பு இல்லாமல் நடப்பது என்பது காலில் உள்ள அக்கு பிரஷர் புள்ளியை தூண்டி உடலில் உள்ள எல்லா நரம்பு முடிச்சுக்களையும் சரியாக இயங்க வைக்கிறது என்பது ஆராய்ச்சி ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

Related Posts