சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். 

அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெரு நாய்கள் குழந்தையை நோக்கி ஓடிவந்துள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை சுற்றி வளைத்துள்ளது.

இதையடுத்து சிறுவன் கூச்சலிட்டுள்ளான். கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்ற தந்தை ஓடி வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெரு நாய்கள் வந்த வேகத்தில் திரும்பின.

Related Posts