காணாமல் போன அண்ணன்: உடைந்த பல்லை வைத்து இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் ஹாதிபூரை சேர்ந்தவர், ராஜ்குமாரி என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

அப்படி ஒருநாள் இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோல் செய்த போது ரீல்ஸில் வந்த ஒருமுகம், தனக்கு நன்கு தெரிந்ததை போல உணர்ந்துள்ளார் ராஜ்குமாரி. மேலும், அந்த ரீல்ஸில் வந்த நபருக்கு பல் ஒன்று உடைந்திருப்பதை கண்ட ராஜ்குமாரி, பார்ப்பதற்கு அது தன் அண்ணன் போல் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.

தன் அண்ணன் போல கை விரல்களும் அந்நபருக்கு சற்று இறுக்கமாக இருந்தது என தெரிவித்த ராஜ்குமாரி, அந்நபர் பற்றி தீவிரமாக விசாரித்திருக்கிறார். 

அதன்முடிவில் 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் அண்ணன் பால் கோவிந்த்தான் ரீல்ஸ் செய்தது என்பதை உறுதி செய்திருக்கிறார் ராஜ்குமாரி. தொடர்ந்து வீடியோ காலில் அழைத்து, மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

மகிழ்ச்சியுடன் கோவிந்த் கடந்த மாதம் 20 ஆம் தேதி ராஜ்குமாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டுள்ளனர்.

Related Posts