தமிழ் சினிமாவை விட்டு போக காரணம் அது தான் - நடிகை மாளவிகா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன்பின் மீண்டும் அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். சினிமாவில் வந்த உடனே அடுத்தடுத்து பல படங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமாகிவிட்டார். அதன்பின் அவர் கவர்ச்சியில் இறங்க பட வாய்ப்புகளும் குறைந்தன. குடும்ப பின்னணியில் நடித்தவர் திடீரென கவர்ச்சியில் இறங்கினால் தமிழ் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இவர் கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார், இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மேனன் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவே இல்லை, திருமணத்திற்கு பிறகும் நான் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்தேன். அப்போது நான் கர்ப்பமாக, கமிட்டான படங்களின் அட்வான்ஸ் எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என கூறியிருக்கிறார். அப்படியே விட்டதால் சுத்தமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இப்போது அரிதாக சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் ஒன்றுமட்டும் வியக்க வைக்கும் செய்தி என்னவென்றால், இவர் மீது இன்னும் இவர் ரசிகர்கள் பிரியமாக உள்ளார்கள். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நடிகையை பிடித்துவிட்டால் இறுதிவரை அவருக்காக அந்த ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள் என்பதற்கு மாளவிகாவே உதாரணம்.

Related Posts