Scarborough பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழர் மரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ Scarborough பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார். 

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் Warden and Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் இந்த சம்பவம்நடந்துள்ளது. இறந்தவர் 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என அடையாளம் காணப்பட்டார். இவர் Pickeringபகுதியை சேர்ந்தவர். இவர் முன்னாள் Tow Truck சாரதி என தெரியவருகிறது. 

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த Warden வீதியில் Shell எரிபொருள் நிலையத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்தில் ரொறன்ரோவில் நடந்த 45வது கொலையாகும். துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் செல்வசிங்கம் அமர்ந்திருந்த SUV வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி குண்டுகளின் காயங்கள் காணப்பட்டன.

சந்தேக நபர் வாகனத்தில் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Posts