அம்பானி வீட்டு விசேஷத்தில் மாஸ் காட்டும் தமிழ் நடிகை, நடிகர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் perform செய்து வருகின்றனர். முன்னதாக இவர்களது நிச்சய விழாவே பெரிதாக இந்தியா முழுக்க பேசப்பட்டது. அப்படி இருக்க இப்போது திருமணம் என்றால் எவ்வளவு கோலாகலமாக இருக்கும்? கோடிகளை வாரி இரைத்து கொண்டிருக்கிறார் அம்பானி. உலகத்தில் உள்ள எல்லா தலைசிறந்த கலைஞர்களும் ஒருங்கிணைந்த ஒரே நிகழ்வு அம்பானி வீட்டு விஷேசம் தான். இந்தியாவை பொறுத்தவரை பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனந்த் அம்பானி திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி நயன்தாரா வரை ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

 சூர்யா - ஜோதிகா, நயன்தாரா - விக்னேஷ் சிவன், ஏஆர் ரஹ்மான், அட்லீ, ரஜினி உட்பட பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இன்ஸ்டா, யூடியூப், என எதை எடுத்துக்கொண்டாலும் எங்கு பார்த்தாலும் அம்பானி வீட்டு புராணம் தான். திருமண வரவேற்பு அழைப்பிதழே பல லட்சங்கள் இருக்கும் என்கிறார்கள். அப்படி என்றால் திருமணம் எப்படி இருக்கும் யூகித்து கொள்ளுங்கள். முன்னரெல்லாம் அம்பானி வீட்டு விசேஷம் என்றால் அரிதாக தான் தென்னிந்திய கலைஞர்களை பார்க்க முடியும். குறிப்பாக ரஜினியை சொல்லலாம். ஆனால் இப்போது நயன்தாரா, ஜோதிகா, அட்லீ என பலரை குறிப்பிட்டு சொல்லலாம். இதை என்னவென்று சொல்வது? தமிழ்நாடு சினிமா துறை வளர்ந்துவிட்டதா? இல்லை சினிமா நடிகர்களின் தகுதி வளர்ந்துவிட்டதா?






சரத்குமார் மகளுக்கு கோலாகல திருமணம் | Thedipaar News

Related Posts