விஜய்காக பல ஆண்டு பேசாமல் இருந்த நயன்தாரா- திரிஷா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நயன்தாரா மற்றும் திரிஷா இருவருமே திரையுலகில் முன்னணி நாயகிகளாக இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நயன்தாரா, திரிஷா நல்ல தோழிகள். என்னதான் திரிஷா நயன்தாராவுக்கு முன்னதாகவே சினிமாவில் இருந்தாலும் கூட, நயன்தாரா சினிமாவில் வந்த சில காலத்திலே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வந்ததால் இவர் முன்னணி ஹீரோயினாக மாறினார். இப்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் சொந்த தொழில்கள் என எங்கேயோ சென்றுவிட்டார். ஆனால் திரிஷாவோ சரியாக பட வாய்ப்பு அமையாமல் சினிமாவில் காலத்தை தள்ளினாலும் கூட தன் முகம் மக்களுக்கு மறக்க கூடாது என சில படங்களில் நடித்து வருகிறார் ஆனால் அந்த படங்கள் எதுவும் பெயர் சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுப்பதில்லை. இந்தநிலையில் திரிஷாவும் நயன்தாராவும் என்னதான் தொழில்முறை போட்டியாளராக இருந்தாலும் கூட நல்ல தோழிகளாக இருந்தார்கள். 

ஆனால் சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் பேசாமல் கூட இருந்துள்ளனர். அதற்கு காரணம் குருவி எனும் படம் தான் என சொல்லப்படுகிறது. விஜய் நடிப்பில் உருவான குருவி படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் திரிஷா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம். ஆனால், இறுதியில் திரிஷாவிற்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் திரிஷா தனது வாய்ப்பை தட்டி பறித்துவிட்டார் என நயன்தாரா மனஸ்தாபத்தில் இருந்தாராம். இதன்பின் சில காலம் திரிஷாவும் நயன்தாராவும் பேசி கொள்ளவில்லையாம். ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முயற்சி செய்த திரிஷா, நடிகை நயன்தாராவிடம் பேச துவங்கியுள்ளார். பின் இருவரும் நல்லபடியாக பேச துவங்கியுள்ளனர். இதுகுறித்து நயன்தாரா மற்றும் திரிஷா இருவருமே பேட்டிகளில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு விசேஷத்தில் நயன்தாரா! | Thedipaar News

Related Posts