வார இறுதி விடுமுறை, சிறப்பு பேருந்துகள் ரெடி! சென்னை வாழ் இதர மாவட்ட மக்களுக்காக!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் ஜூலை 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், ஜூலை 27ஆம் தேதி 290 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.இனி நல்ல நாள், பண்டிகை எனும் போது சென்னை வாழ் இதர மாவட்ட மக்கள் திணற தேவை இல்லை. சிறப்பு பேருந்து மூலம் நீங்கள் உங்கள் பண்டிகைக்கு சரியான நேரத்தில் போய் சேரலாம்.

வெளிநாட்டு பெண்ணை நெகிழ்ச்சியடைய வைத்த இலங்கையர் | Thedipaar News

Related Posts