திருமண விழாவில் ஆனந்த் அம்பானிக்கு குவிந்த பரிசு! யாரெல்லாம் என்னவெல்லாம் கொடுத்தாங்க?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்த வருடம் ஆரம்பமான நாள் முதல் இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான். உலகத்தில் இதுவரை இப்படி ஒரு திருமணம் நடக்கவில்லை இனியும் இப்படி ஒரு கல்யாணம் நடக்குமா என்றால் சந்தேகமே! திருமணத்தில் கலந்துகொண்ட மாப்பிள்ளைக்கு நெருங்கிய பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கான் ரூ. 40 கோடி மதிப்புள்ள பிரான்சில் அபார்ட்மெண்ட் ஒன்றை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் குடும்பம் ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனராம்.

 சல்மான் கான் ரூ. 15 கோடி மதிப்புள்ள சொகுசு பைக், தீபிகா-ரன்வீர் இணைந்து ரூ. 20 கோடி மதிப்புள்ள ஒரு ரோல்ஸ் ராயஸ் கார் ஒன்றை வழங்கியுள்ளார்களாம்.அதேபோல் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி தங்க பேனாவை வழங்கியுள்ளாராம். ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி இணைந்து ரூ. 9 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5000 கோடி செலவில் திருமணம் நடத்திவிட்டு 25,000 கோடிக்கு பிசினஸ் இந்த திருமணத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக ஆதாயம் இல்லாமல் அம்பானி போன்ற தொழில் அதிபர் இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைப்பாரா?

எலான் மஸ்க் இலங்கை விஜயம் | Elon Musk | Thedipaar News

Related Posts