விஜய் இடத்தை பிரசாந்த் பிடிப்பாரா ? - வனிதா அதிரடி புகழாரம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடந்த அந்தகன் படவிழாவில் பேசுகையில், என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி தியாகராஜன் சார்.பிரசாந்த் சிறந்த மனிதர். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் எளிதாக தானாகவே சென்றடையும்.‌ இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.‌ ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் வேற்று மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.‌ இந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் பணிகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அன்றே கொடுத்து விடுவார். நான் ஒரு பயணத்தின் போது என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் தொடர்பு கொண்டார். 

நான் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை பரிசாக அளித்தார், அதுதான் தியாகராஜன் சார். நான் விஜய்யுடன் நடிக்கும்போது நீ தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சொன்னேன். அவர் அப்போது நம்பவில்லை. அவர் இன்று இருக்கும் என அவருக்கு தெரியும். விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். அந்த இடத்திற்கு பிரஷாந்த் வருவார். பிரசாந்த் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசியுள்ளார் வனிதா.

இந்தச் செய்தி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை | Thedipaar News

Related Posts