டாக்ஸியில் ரொறன்ரோ வந்த பெண்ணிடம் நடந்த மோசடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

லண்டனிலிருந்து ரொறன்ரோ நோக்கி டாக்ஸியில் பயணித்த பெண் டெபிட் அட்டையின் மூலம் தாம் கட்டணத்தை செலுத்தியதாக தெரிவிக்கின்றார்.

பயண தூரத்திற்கான கட்டணமாக 7 டொலர்கள் காண்பிக்கப்பட்டதாகவும் குறித்த பெண் 10 டாலர்களை டிரைவருக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அவர் பத்து டாலர்களை ஏற்க மறுத்து விட்டதாகவும் டெபிட் அட்டை மூலம் மட்டுமே கொடுப்பணவு செய்ய முடியும் எனவும் சாரதி கூறியுள்ளதாக தெரிவிக்கின்றார். குறித்த பெண் விருப்பமின்றி டெபிட் அட்டை மூலமாக கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

இந்த டெபிட் அட்டையை பயன்படுத்தி கொடுப்பனவு செய்து மறுநாள் பார்த்தபோது தனது கணக்கில் சில மோசடியான கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றிருப்பதாகவும் மொத்தமாக 7,485 டாலர்கள் மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதனைம் அவதானித்ததாக தெரிவிக்கின்றார்.

டாக்ஸி மோசடிகள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக கனடிய டாக்ஸி ஒன்றியம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு நபரும் தாம் டாக்ஸி சாரதி என தோன்றி மோசடிகளை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கனடிய டக்சி ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பெண் மோசடியாக இழந்த பணத்தை வங்கி மீள அறவீடு செய்து வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு வழிகளில் இவ்வாறான டாக்ஸி மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அனுரவுக்கான மக்கள் விருப்பு அதிகரிப்பு - IHP ஆய்வு   | Thedipaar News

Related Posts