நடிகை விசித்திராவின் துணிச்சலான கேள்வி! ரஜினிக்கு கேட்டிருக்குமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலையாள சினிமாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொ*டுமையை கண்டித்து பல நடிகர் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். அதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் தலைவரான மோகன்லால் ராஜினாமா செய்தார். இது தென்னிந்திய சினிமாவில் பலருக்கும் அதிருப்தியை அளித்தது. இந்த நிலையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்த நடிகை விசித்ரா பேட்டி ஒன்றில் ஹேமா கமிட்டி குறித்து பேசியுள்ளார். இவர் எப்போதும் இது போன்ற சமாச்சாரங்கள் குறித்து உள்ளதை உள்ளபடி கூறுவார். இவர் சொல்வதிலும் உண்மை தன்மை நிறைந்தே இருக்கும். பிக்பாஸில் இவர் கலந்துகொண்ட போது, தனக்கு சினிமாவில் ஏற்பட்ட தவறான சீண்டல்கள் குறித்தும், தான் அதுபற்றி புகார் செய்தும் எந்த பலனும் இல்லை என்றும் கூறி இருந்தார். 

 தற்போது விசித்ரா பேசுகையில், ஹேமா கமிட்டி குறித்து ரஜினியிடம் கேட்டால் எவ்வாறு பதில் கூறுவார்? அவர் மனைவி மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரிடம் சென்று இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புங்கள். இதுபற்றி பல முன்னணி நடிகர்கள் பேசாமல் மௌனம் காத்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்தபோதே சொல்லியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அது நடந்தபோது நான் நடிகர் சங்கம், காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லையே என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தீயினை அணைக்க முயற்சித்த பெண் வைத்தியசாலையில் அனுமதி | Thedipaar News

Related Posts