நாசுக்காக பேசி நழுவும் விஜய்டிவி பிரபலம்! உடைத்து சொல்லாமல் வழவழ பேச்சு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குக் வித் கோமாளி 5ம் சீசன் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அதில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அதற்கு காரணம் பிரியங்கா அதிகம் தனது வேலையில் தலையிட்டது தான் என அவர் கூறி இருக்கிறார். பிரியங்கா அல்லது மணிமேகலை இருவரில் யார் செய்தது தவறு என இணையத்தில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.மணிமேகலை வெளியேறுவது குறித்து பதிவு போட்டதும் அவருக்கு ஆதரவாக அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி பதிவு போட்டார். இப்போது திடீரென அந்த பதிவை குரேஷி டெலிட் செய்துள்ளார். 

நெகட்டிவிட்டி அதிகம் பரவுவதை தடுக்க இப்படி செய்தேன் என்றும் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள் குறித்தும் தெளிவாக பேசி தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வெளிப்படையாக எதுவும் பேசாமல் நாசுக்காக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். உதாரணத்திற்கு பிரியங்கா பக்கமும் ஆதரவாக பேசுகிறார் அதே போல மணிமேகலை பக்கமும் ஆதரவாக பேசுகிறார். முன்னர் அவர் போட்ட ட்வீட் முழுக்க முழுக்க மணிமேகலைக்கு ஆதரவாக மட்டுமே இருந்தது. இப்போது வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்க்கும்போது, விஜய்டிவி பக்கம் எழுந்த அழுத்தம் காரணமாகவே இப்படி பேசுகிறார் என்பது போல உள்ளது.

Related Posts