ஷோ உள்ளே பயணிக்கும் புகழுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதாம்! கம்பிக்கட்டும் கதையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் பிடித்தமான ஷோ. பலருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நிகழ்ச்சி என்பது இதன் சிறப்பு அம்சம். 4 சீசன்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாக 5வது சீசன் இந்த வருடம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இயக்குனர் குழு, தயாரிப்பு நிறுவனம் என முழுக்க முழுக்க புது வேலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த நிகழ்ச்சி பிரச்சனையில் உள்ளது என்பதை கேட்கும் போது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது. இந்த பிரச்சனை எப்போது முடியும் என்பது தான் ரசிகர்களின் கேள்வி. 

மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் ஆதரவு குரல் கொடுத்து பிரபலங்கள் பதிவு செய்து வருகிறார்கள். தன்னுடைய தொகுப்பாளினி வேலையில் பிரியங்கா தலையிடுகிறார் என்பதே முதல் குற்றசாட்டு.பிரியங்கா தொகுப்பாளினி பணியில் மட்டும் அல்ல எல்லா வேலைகளிலும் அவரது தலையீடு இருக்கும் என்பதை ஷோ பார்க்கும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழிடம், குக் வித் கோமாளி மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், அது அவர்களுக்குள் உள்ள பிரச்சனை. உங்கள மாதிரி தான் எங்களுக்கும், அவர்களுக்குள் என்ன பிரச்சனை தெரியாது, சேனலுக்கு வருமா என்றும் தெரியாது. இந்த பிரச்சனை பொதுவெளிக்கு வந்ததே என கேட்க, ஒரு வீடியோ பார்த்துட்டு 1000 பேர் ஒரு வீடியோ போடுகிறார்கள், எது பிரச்சனையோ அவர்கள் இருவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வரட்டும், அதன்பின் பார்ப்போம் என கிளம்பி உள்ளார்.

Related Posts