இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எந்த வன்முறையும் இடம்பெறாத மிகவும் அமைதியான தேர்தல் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக பாதுகாப்புப் படைத்தலைவர்கள் அதிகளவான இராணுவத்தினரை முகாம்களில் இருந்து பொதுப்பாதுகாப்பிற்காக களமிறக்கியுள்ளனர்

அறுபத்தைந்தாயிரம் பொலிஸாரை வாக்களிப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்திய பின்னர், பொதுச் சொத்துக்கள், அரச சொத்துக்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க பொலிஸ் நிலையங்களில் போதிய ஆட்கள் இல்லாத காரணத்தினால் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts