மணிமேகலை - பிரியங்கா விவகாரம்! உண்மையை உடைத்து கூறிய பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.மக்கள் எந்த ஷோ பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வந்தார்கள். இந்த வருடம் படு கோலாகலமாக 5வது சீசன் ஒளிபரப்பானது, ஆனால் இதில் பழைய சீசன்களின் டச் இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. ஏனெனில் முன்னர் இருந்த இயக்குனர் குழு, தயாரிப்பாளர் குழு இங்கு இல்லை.

 ஷோ மற்றும் கோமாளிகள் மட்டும் தான் பழையது மற்றபடி மற்ற எல்லாமே புதியது என்பதால் இந்த முறை ஷோ முழுக்க முழுக்க பார்க்க வித்தியாசமாக உள்ளது என்பது ரசிகர்களின் கருத்து. தற்போது நிகழ்ச்சியில் மணிமேகலை தன்னை ஒரு போட்டியாளர் தன் வேலையை செய்ய குறுக்கிடுகிறார் இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறி ஒரு வீடியோ வெளியிட பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து KPY சரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இவங்க இரண்டு பேரோட பிரச்சனை நாட்டுக்கு தேவை இல்லை, இன்னைக்கு அடிச்சிப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க.அன்னைக்கு நாம் தான் முட்டாளா ஆகியிருப்போம். நம்மல மறந்துட்டாங்கனு நெனச்சு கூட இப்படி பண்ணியிருக்கலாம், வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டாங்க என கூறியிருக்கிறார். இவர் கூறுவது உண்மையே. இணையம் முழுக்க இந்த விவகாரம் தான் பேசப்பட்டது. இந்த பிரச்சனை அந்த அளவிற்கு நாட்டிற்கு முக்கியம் இல்லையே?

Related Posts