மணிமேகலையை மறைமுகமாக வார்த்தையால் தாக்கினாரா பிரியங்கா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ 5வது சீசன் பைனல் ஒளிபரப்பானது. டைட்டில் யாருக்கு என நடந்த போட்டியின் இறுதியில் பிரியங்கா தான் ஜெயித்தார் என நடுவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பிற்கு முன்னரே பிரியங்கா தான் வெற்றியாளர் என சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. இது ஒன்றும் பிரியங்காவிற்கு ஆதரவான கிசுகிசு இல்லை. முழுக்க முழுக்க பிரியங்காவிற்கு எதிரான விமர்சனம். தற்சமயம் விஜய் டிவியில் வழங்கப்படும் விருதுகளில் பிரியங்காவிற்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு அவார்ட் கொடுப்பட்டு விடுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களையும் இவரே தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியில் எங்கு பார்த்தாலும் இவர் முகம் தான். 

இந்த நிலையில் இப்போது குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் பிரியங்காவுக்கு குக்கிங் ராசாத்தி என பட்டத்தையும் கொடுத்தனர். மற்றொரு முக்கிய போட்டியாளரான சுஜிதாவுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது. அவர் தான் ஜெயிப்பார் என அதிகம் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இங்கு தான் வெற்றி யாருக்கு என முன்னரே முடிவு செய்யப்பட்டு விட்டதே? மேலும் பிரியங்கா - மணிமேகலை சண்டை காரணமாக கடந்த சில வாரங்களாகவே குக் வித் கோமாளி ஷோ பற்றி தான் நெட்டிசன்கள் பரபரப்பாக பேசி கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.எனக்கு யாரும் போட்டி இல்லை. எனக்கு நான் தான் போட்டி. கிட்சன் சூப்பர்ஸ்டார் ஜெயிக்க முடியாத நான் தற்போது குக் வித் கோமாளியில் டைட்டில் ஜெயித்து இருக்கிறேன் என பிரியங்கா கூறி இருக்கிறார். உண்மை என்னவென்றால் பிரியங்காவின் வெற்றியை அவரது ரசிகர்களே வெறுக்கிறார்கள்.

Related Posts