ரொறன்ரோவில் வாகன கொள்ளை சம்பவங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பெரும் பாகப்பகுதியில் இடம்பெறக்கூடிய வாகன கொள்ளை சம்பவங்களை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோர்க் பிராந்திய போலீசார் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் களவாடப்பட்டு மறைத்து வைக்கப்படும் இடங்கள் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 அநேகமான வாகனங்கள் களவாடப்பட்டு பின்னர் அவை இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts