நாளுக்கு நாள் அதிகமாகும் வெ*டிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெ*டிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெ*டிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது பள்ளி, காட்டூரில் உள்ள கான்போர்டு மேல்நிலைப்பள்ளி உட்பட 8 இடங்களுக்கு வெ*டிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. மேலும் சமீப காலமாக ரயில்வே நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வெ*டிகுண்டு மிரட்டல் வருவது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts