யாழ் பெண் கனடாவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி துஷி. இவர் கனடாவில் வசித்து வருகிறார். 

ரொறன்ரோவில் உள்ள இவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 

Ellesmere and Orton Park பகுதியில் இடம் பெற்ற இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது என ரொறன்ரோ போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 

 தகவல் கிடைத்ததும் 151 Merkley Square என்ற விலாசத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு பொலிசார் விரைந்த போது துஷி மரணமடைந்து விட்டதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 

 இந்த சம்பவம் சம்பந்தமாக ராகுலன் என்று 50 வயது நபரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ராகுலன் கொல்லப்பட்ட துஷியின் சகோதரன் என்று தெரிய வருகிறது.

Related Posts