பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை! காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இப்போதெல்லாம் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் கடை திறப்பு, தனியார் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிறார்கள். சினிமா நடிகைகளை விடுத்து சீரியல் நடிகைகளை கொண்டாடும் காலம் இது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் தான் கோமதி ப்ரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறார். கோமதி ப்ரியா சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கான செம்பனீர் பூவே என்ற தொடரில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

அந்த தொடர் மூலம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். ஆனால் திடீரென மலையாள தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.தனது இன்ஸ்டாவில் உங்கள் வாழ்க்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்காதீர்கள், அவர்கள் உங்களை காயப்படுத்தலாம், ஆனால் அதை நீங்கள் அனுமதிக்காத வரை அவர்களால் உங்களை அழிக்க முடியாது.உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டு விடாதீர்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார். முதலில் இந்த பதிவை பார்த்த தமிழ் ரசிகர்கள் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து தான் விலகியுள்ளார் என கமெண்ட் செய்து வந்தனர் பின்னரே விலகியது மலையாள தொடரில் இருந்து என்ற செய்தி வெளியானதை ஒட்டியே இந்த பதிவை பதிவிட்டுள்ளார் என புரிந்து கொண்டனர் இவரது ரசிகர்கள்.

சிறைச்சாலையில் கணவனை பார்க்க சென்ற மனைவி கைது! | Thedipaar News

Related Posts