டாடா அவர்களுக்கு அரசு செய்த மரியாதை! குவியும் கூட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ரத்தன் டாடாவின் உடல் இன்று தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை அரங்கில் (NCPA) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

Related Posts