இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள நன்கட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குல்ஷன் கோஸ்வாமி (வயது 35). இவர் தனது 70 வயதான பாட்டியை நாற்காலியில் கட்டி வைத்து கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.
அதன்பின் தனது பாட்டியின் ரத்தத்தை சேகரித்து, அருகில் உள்ள கோயிலின் சிவலிங்கம் மீது “சிவன் இங்கே இருக்கிறார்” என்று ரத்தத்தால் எழுதியதாக கூறப்படுகிறது. பின் தனது பாட்டியை தாக்கிய அதே ஆயுதத்தை கொண்டு, தன்னையும் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அந்த வாலிபர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து நந்தினி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குல்ஷன் பாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் குல்ஷனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரமம் தெரியவரும்” என்று போலீசார் கூறினார்.