பாகிஸ்தானில் தாக்குதல் ; 31 பேர் பலி,

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 169 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மசூதியின் நுழைவாயில் அருகே பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தற்கொலைதாரி, பின்னர் உள்ளே நுழைந்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.


இந்த கோரத் தாக்குதலுக்கு ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் சிதறிக் கிடந்த காலணிகளால் மசூதி வளாகமே போர்க்களம் போல காட்சியளித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், விரிவான விசாரணைக்கு ஆணையிடல் விடுத்துள்ளார்.


இதற்கிடையே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தத் தாக்குதலில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இந்த ஆதாரமற்ற புகார்களை இரு நாடுகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts