ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பெண் உள்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார் திகாதியா நகர் அருகே சென்றபோது திடீரென சரக்கு லாரி ஒன்றின் மீது மோதியது.
இந்த விபத்து பற்றி காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறும்போது, காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சாக்சு நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்து விட்டார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது. அந்த கார் நம்பர் பிளேட்டானது, எம்.பி. ஒருவரின் பதிவெண் கொண்டது என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கார் பதிவெண் அடிப்படையில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். விபத்து பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
Font size:
Print
Related Posts
