நயன்தாராவை ஓரம் கட்டிய பிரபல நடிகை! இனி தமிழ் சினிமாவில் எல்லாமே இவங்க தான்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இந்திய சினிமாவில் national Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இவரது நடனம் மற்றும் நடிப்பு மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க தமிழ் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். மிகவும் துடிப்பான நடிகை, சினிமாவில் வந்த உடனே விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். இப்போது இவர் விஜய் தேவர கொண்டவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் எந்த கிசுகிசுவையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார். இவரது பேச்சு குழந்தை தனம் மிக்கதாக பார்க்கப்பட்டாலும் கூட பெரும்பாலானோர் இவரை கிரிஞ் என்றே கமெண்ட் செய்கிறார்கள். இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.முன்பு, புஷ்பா 1 படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கிய ராஷ்மிகா தற்போது, ரூ. 7 கோடி வரை அவரது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இந்நிலையில், 20 ஆண்டுகள் கழித்து நயன்தாரா ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ராஷ்மிகா வெறும் 9 ஆண்டுகளிலேயே வாங்கிவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts