அம்பானி வீட்டு திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? பிரபலம் உடைத்த உண்மை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. சமீபத்தில், இவருடைய இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. உலகத்தில் உள்ள எல்லா பிரபலங்களும் ஒருங்கே கலந்துகொண்டு திருமணம் என்றால் வரலாற்றில் அது இந்த திருமணமாக தான் இருக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அட்லீ, என தமிழ்நாட்டில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கங்கனா ரணாவத் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது ஏன் என்பதை பற்றி பேசியுள்ளார். 

 அதில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நாள் அன்று என் தம்பியின் திருமணமும் நடைபெற இருந்ததால் என்னால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததன் காரணத்தை அவர்களது குடும்பத்திடம் கூறிவிட்டேன். மேலும், நான் பிரபலங்களின் திருமணத்தில் கலந்து கொள்ள கூடாது என்ற முடிவில் உள்ளேன் என்றும், ஆனால் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசை | Thedipaar News

Related Posts