மனுஷ, ஹரின் இருவரையும் நீக்கியது சரி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அமைச்சர்களான மனுஷ்ய நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு உடன்பட்டது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்ற நீதியசர்களான விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமது கட்சி உறுப்புரிமையை பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (P)

யாழில் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது | Thedipaar News

Related Posts